சென்னை: 100நாள் வேலை திட்டத்தை சம்மட்டி கொண்டு அடித்து ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில் மோடிஅரசு  செயல்பட்டு வருவதாக  முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்காக தமிழ்நாட்டுக்கு  தரவேண்டிய ”ரூ.4034 கோடி நிதியை வழங்காமல் தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் மத்திய அரசை கண்டித்து,  திமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், 100நாள் வேலை திட்டத்தை ஒழித்துகட்டும் வேலையில் மத்தியஅரசு இறங்கி உள்ளது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ்  தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில் கூறியிருப்பதாவது,

“காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை.

இந்தியக் கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, இரத்த ஓட்டமாக #UPA அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட #MGNREGA மீது சம்மட்டி கொண்டு அடித்து ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில் இறங்கியிருக்கிறது இரக்கமற்ற பாஜக அரசு!

உங்களுக்கு ‘வேண்டப்பட்ட’ கார்ப்பரேட்டுகள் என்றால் பல லட்சம் கோடி ரூபாய்க் கடனைக் கூட ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்கிறீர்களே?

வேகாத வெயிலில் உடலை வருத்தி, வியர்வை சிந்தி உழைத்த ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்க மட்டும் ஏன் பணமில்லை?

பணமில்லையா அல்லது மனமில்லையா?

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை.

இந்தியக் கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, இரத்த ஓட்டமாக #UPA அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட #MGNREGA மீது சம்மட்டி கொண்டு அடித்து ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில்…

— M.K.Stalin (@mkstalin) March 29, 2025

தமிழ்நாடெங்கும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் உடன்பிறப்புகளும், ஏழை மக்களும் எழுப்பும் குரல் டெல்லியை எட்டட்டும்! பாஜக அரசின் மனம் இரங்கட்டும்!.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.