72வது உலக அழகி போட்டி தெலுங்கானாவில் 2025 மே 7 முதல் 31 வரை நடைபெறுகிறது.
இதைப் பிரபலப்படுத்த 2024ம் ஆண்டு நடைபெற்ற 71வது உலக அழகிப் போட்டியில் பட்டம் வென்ற கிறிஸ்டினா பிஸ்கோவா மார்ச் 18ம் தேதி ஹைதராபாத் வந்துள்ளார்.
அவர் நேற்று தெலுங்கானாவின் யாதகிரிகுட்டாவில் உள்ள லட்சுமி நரசிம்மசுவாமி கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தார்.
செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா, பாரம்பரிய இந்திய புடவை அணிந்து, கோவிலுக்குச் சென்று, காணிக்கை செலுத்தி, பூசாரியிடம் ஆசிர்வாதங்களைப் பெற்றார்.
“யாதகிரி குட்டா கோயிலுக்குச் சென்றது எனக்கு மகிழ்ச்சியையும் மன அமைதியையும் அளித்தது.” இது வெறும் ஆரம்பம் தான்! தெலுங்கானாவையும் அதன் மறைந்திருக்கும் ரத்தினங்களையும் இன்னும் அதிகமாகப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்று கிறிஸ்டினா தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார்.
2024 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற 71வது உலக அழகி போட்டியில் 110க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர். இறுதிப் போட்டியில் செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா பட்டம் வென்று மகுடம் சூடினார்.