சென்னை

மிழக அமைச்சர் தங்கம் தென்னரசு மின் கட்டண உயர்வுக்கு அதிமுக தான் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக நிதி மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம்,

“அதிமுகவே தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வுக்கு காரணம்.  அ.தி.மு.க. செயல்பாடு. பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதுபோல உள்ளது.  மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஏற்க மறுத்த உதய் மின் திட்டத்தில் தமிழ்நாட்டை இணைத்து கையெழுத்திட்டது எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான்.

அ.தி.மு.க உதய் மின் திட்டத்தில் இணைந்ததுதான் தற்போதைய மின் கட்டண உயர்வுக்கு காரணம். ஆனால் மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. போராட்டம் நடத்துவது வேடிக்கையானது. கடந்த 2011-12 தி.மு.க. ஆட்சியில் 18,954 ஆயிரம் கோடி வருவாய் இழப்புடன் விட்டு சென்றோம்.

தற்போது ரூ.1 லட்சத்து 59 கோடிக்கு மேல் கடன் உள்ளதால் இதற்கு வட்டியும் கட்டி வருகிறோம். இந்த நிதி சுமையை சரிகட்டவே கட்டண உயர்வு செய்துள்ளோம். பலமுறை அ.தி.மு.க. ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில்தான் மிக குறைந்த அளவில் மின் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது”

எனத் தெரிவித்துள்ளார்.