சென்னை

மிழகத்தில் 1000 இடங்களில் வரும் 15 ஆம் தேதி மருத்துவமுகாம்கள் நடட்தப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவிக்துள்ளார்.

இன்று அமைச்சர் மா சுப்ரமனியன் செய்தியாளர்களிடம்,

”தமிழக சுகாதாரத்துறை வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது. தற்போது காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறோம்.

வருகிற 15-ந்தேதி தமிழகம் முழுவதும் 1, 000 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது இதில்.சென்னையில் 100 இடங்களிலும், மற்ற மாவட்டங்களில் 900 இடங்களிலும் இந்த முகாம்கள் நடத்தப்படுகிறது.

மக்கள் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு முழுமையாக ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். டெங்கு காய்ச்சலால் 2012-ம் ஆண்டு 66 பேரும், 2013-ல் 65 பேரும் உயிரிழந்துள்ள நிலையில் கடந்த 3 ஆண்டுகளில் டெங்கு உயிரிழப்புகள் குறைந்து உள்ளன”

என்று தெரிவித்துள்ளார்.