சென்னை: அமைச்சர் நேரு மீதான நகராட்சி நிர்வாகத்துறை, குடிநீர் வாரியம் ஊழல் குறித்து வழக்கு பதிய கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு உள்ளது.
திமுக அமைச்சர் நேருவின் துறையான நகராட்சி துறையில், அரசு பணிக்கு ரூ.35லட்சம் பணம் பெற்றதாகவும், குடிநீா் வழங்கல் துறை நியமனங்களுக்கு லஞ்சம் பெற்றது மற்றும் டெண்டரில் முறைகேடு நடைபெற்றதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மாநில டிஜிபிக்கு கடிதம் அனுப்பியது. ஆனால், அந்த கடிதத்தின்மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த ஒருவர், தமிழ்நாடு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை நியமனங்களுக்கு லஞ்சம் பெற்றது தொடா்பாக அமலாக்கத் துறை அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்தமனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, மனு குறித்து, தமிழக உள்துறைச் செயலா், அமலாக்கத் துறை இயக்குநா், டிஜிபி ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரையை சோ்ந்த ஆதிநாராயணன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2024-25 ஆம் ஆண்டுகளில், தமிழ்நாடு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில், உதவிப் பொறியாளா், இளநிலை பொறியாளா், சுகாதார ஆய்வாளா் உள்ளிட்ட 2,538 பணியிடங்களுக்கு நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில், ஒரு பதவிக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை என்ற அடிப்படையில் மொத்தமாக ரூ.634 கோடி லஞ்சமாக பெறப்பட்டுள்ளது. இதுதொடா்பாக ஆதாரங்களுடன் தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை 232 பக்கங்கள் கொண்ட கடிதத்தை அனுப்பியுள்ளது.
அந்த கடிதத்தில், குற்றச்சாட்டுக்கு போதிய முகாந்திரம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய வேண்டியது காவல் துறையின் கடமை. இதுபோன்ற ஊழல் வழக்குகளை அமலாக்கத்துறை நேரடியாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க முடியாது. மாநில போலீஸாா் வழக்குப்பதிந்தால், அதன் அடிப்படையில்தான் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ய முடியும்.
எனவே, அமலாக்கத் துறை டிஜிபிக்கு ஆதாரங்களை அனுப்பியுள்ளது. ஆனால், இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை. எனவே, தமிழக அரசு வெளிப்படையான நிா்வாகத்தை உறுதி செய்யும் வகையில், இந்த ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யக் கோரி டிஜிபிக்கு கடந்த நவம்பா் மாதம் மனு அளித்தேன்.
அதன்மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அமலாக்கத் துறை அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில் தமிழக அரசின் தலைமைச் செயலரிடம் உரிய அனுமதிப் பெற்று வழக்குப்பதிவு செய்ய டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக உள்துறைச் செயலா், அமலாக்கத்துறை இயக்குநா், டிஜிபி ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜன.23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா். மேலும், தமிழ்நாட்டில் மணல் குவாரி முறைகேடு தொடா்பாக அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யக் டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையையும் ஜன.23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
[youtube-feed feed=1]