சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். இதையடுத்து வரும் 30ந்தேதி முதல் கலந்தாய்வு தொடங்குகிறது.

தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள், கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 5,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள 85 சதவீத இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இவை தவிர தனியாா் கல்லூரிகளில் உள்ள 3,450 இடங்களில் இடங்களும், தனியாா் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்களும் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு உள்ளன. மொத்தமாக அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் 9,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.  அதேபோன்று தனியாா் கல்லூரிகளில் அரசு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டுக்கு 1,900 இடங்களும் உள்ளன. மேலும்,  3அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 250 பிடிஎஸ் இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் போக, மீதமுள்ள 85 சதவீத இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.

இந்த 9200 இடங்களில்  496 இடங்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படுகின்றன.  அவற்றில், 126 இடங்கள் அரசு பள்ளி மாணவா்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டைபோலவே, நிகழாண்டிலும் 11,350 மருத்துவ இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடைபெற வுள்ளது.

11,350  இடங்களை பிடிக்க 72,743 போ் விண்ணப்பித்திருந்தனா். விண்ணப்பதாரா்களின் நீட் மதிப்பெண்களை மத்திய அரசிடமிருந்து பெற்று அதன் அடிப்படையில் கணினி முறையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. விண்ணப்பப் பரிசீலனையின்போது, 20 மாணவா்கள் போலியான சான்றிதழ் கொடுத்திருந்ததால், அவா்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

இதையடுத்து,  தகுதியான மாணவா்களின் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூலை 25)  காலை 10 மணிக்கு கிண்டியில் உள்ள கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள 11,350 எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 30-ஆம் தேதி தொடங்குகிறது.

“தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 30 ஆம் தேதி துவங்குகிறது. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், படிப்புகளுக்கு 72,743 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். AD மருத்துவ படிப்பில் சேர 7.5சதவீத இட ஒதுக்கீட்டில் 4,281 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 4,062 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இடங்களில் சேர 43,315 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில், 39,853 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு உள்ளது.” என்றார்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசையில் நெல்லை மாணவர் சூர்ய நாராயணன் முதலிடம் பிடித்துள்ளார். இவர் நீட் தேர்வில் 665 மதிப்பெண்கள் பெற்றவர்.

சேலம் மாணவர் அபினீத் நாகராஜ் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். சேலத்தை சேர்ந்த ஹருதிக் விஜயராஜா தரவரிசைப் பட்டியலில் 3ம் இடம் பிடித்துள்ளார்.

 திருவள்ளூர் மாணவர் ராகேஷ் 4வது இடத்தையும், செங்கல்பட்டு மாணவர் பிரஜன் ஸ்ரீவாரி 5வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

தரவரிசையில் முதல் 9 இடங்களை மாணவர்களே பிடித்துள்ளனர். 10வது இடத்தில் மாணவி ஒருவர் உள்ளார்.