டெல்லி

த்திய அமைச்சர் ஜெய்சங்கர் போர் நிறுத்தம் என்பது இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி எடுத்த முடிவு எனக் கூறியுள்ளார்

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், செய்தியாளர்களிடம்.

“2 நாடுகள் சண்டையில் ஈடுபடும்போது, மற்ற உலக நாடுகள் பிரச்சினையை தீர்க்க முயற்சிப்பது இயல்புதான். ஆனால், சண்டையை நிறுத்த எடுத்த முடிவு, இந்தியாவும், பாகிஸ்தானும் நேரடியாக பேசி எடுக்கப்பட்ட முடிவு.

அமெரிக்காவுக்கு மட்டுமின்றி எங்களுடன் பேசிய எல்லா நாடுகளுக்கும் சொல்லிக் கொள்கிறேன். சண்டையை நிறுத்த பாகிஸ்தான் விரும்பியது. அதை எங்களிடம் சொன்னது. அவர்களிடம் நாங்கள் பேசினோம். இதுதான் நடந்தது.

அதே சமயத்தில், பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால், தக்க பதிலடி கொடுப்போம். அதனால்தான் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை என்று சொல்லி இருக்கிறோம்.”

என்று கூறியுள்ளார்.