திருச்சி

மிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மறைந்த அன்பில் பொய்யாமொழியின் 25ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், திருவுருவப்படத்திற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அப்போதுது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம்,

”கடந்த ஜூன் மாதம் வரை மத்திய அரசிடம் இருந்து பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் வரவேண்டிய ரூ.573 கோடி ரூபாய் தற்போது வரை வராமல் உள்ளது. திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மத்திய கல்வித்துறை அமைச்சரை சந்தித்து இது குறித்து வலியுறுத்தி உள்ளனர்.

வெளிநாடு செல்வதற்கு முன்பு மத்திய அரசை முதல்வர் வலியுறுத்தி விட்டுச் சென்றுள்ளார்.ஆனால் ரூ. 573 கோடி மட்டுமல்லாமல், கடந்த ஆண்டு வரவேண்டிய ரூ. 249 கோடியும் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் கீழ் வந்தால் மட்டுமே இந்த நிதி உடனே கிடைக்கும் என அவர்கள் தெரிவிக்கிறார்கள்,

புதிய கல்வி கொள்கையில் இணைய மத்திய அரசு அழுத்தம் தருவது, உண்மைதான். பள்ளிக்கல்வித் துறையில் தமிழக அரசு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது என்ற முறையில் மத்திய அரசு அதனை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதையே மறந்து விடுகிறார்கள். கொள்கை என்பது விவாதம் சார்ந்தது, அதற்காக நிதியை நிறுத்துவது நியாயம் அல்ல.

மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வரும் போது, தமிழ்கத்தைப் பொறுத்தவரை தேன் கூட்டில் கை வைப்பது மாதிரி தான். 2030க்குள் ஜிஇஆர்-ஐ 50% தாண்ட வேண்டும் என மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது. ஆனால் தமிழகம் 2 வருடங்களுக்கு முன்பே இதை தாண்டி விட்டது.

தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது என்பதால் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும், தமிழக மாடலை மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்கொள்கிறோம் என சொல்வதுதான் ஆரோக்கியம். மத்திய அரசு கல்விக்கான நிதியை எப்போதும் நிறுத்திவிடக் கூடாது. பல லட்சம் மாணவர்களுடைய கல்வி சார்ந்த விஷயமாஅ இதில் அரசியல் செய்யக்கூடாது எனக் கேட்டுக் கொண்டுள்ளோம்.’

என்று கூறி உள்ளார்.