பார்மர்

ராஜஸ்தான் மாநிலத்தில் மிக் 29 ரக போர் விமானம் விபத்துக்குள்ளாகியது.

ராஜஸ்தானின் பார்மர் என்ற பகுதியில் உள்ள உத்தராலி என்ற விமானப்படை தளம் அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 29 ரக போர் விமானம் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

விமானம் இந்த விபத்தில் தரையில் விழுந்து தீப்பிடித்து எரியத்துவங்கியது. விமானி அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பியதாக கூறப்படுகிறது . விபத்தில் யாருடைய சொத்துக்கும் உயிருக்கும் பாதிப்பு இல்லை என கூறப்பட்டுள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்தமீட்பு படையினர் அந்த பகுதிக்கு சென்றுள்ளனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்ட போதிலும், விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு விமானப் படை உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பார்மர் மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் ஜெயின், காவல்துறை கண்காணிப்பாளர் நரேந்திர சிங் மீனா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். இந்த விபத்து இரவு நேரத்தில் நடந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.