சென்னை: டிசம்பர் 24ந்தேதி எம்ஜிஆரின் 38-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து, கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள மெரினா நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை செய்கின்றனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ‘பாரத் ரத்னா’ புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 38-ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் வரும் 24ந்தேதி மலர் அஞ்சலியும், உறுதிமொழி ஏற்பும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 38-வது நினைவு தினத்தை ஒட்டி வரும் டிச.24-ம் தேதி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தவுள்ளனர்.
இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆர் 1987-ம் ஆண்டு டிச.24-ம் தேதி அமரர் ஆனார். அவரது 38-வது ஆண்டு நினைவு நாளான வரும் டிச.24-ம் தேதி காலை 10 மணிக்கு,சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று,மலர் வளையம் வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளார்.
இந்நிகழ்ச்சிகளில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “வரும் டிச.24-ம் தேதி எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம், மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் மலர் வளையம் வைத்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்”.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும் சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
[youtube-feed feed=1]