டெல்லி: எம்ஜிஆரின் 105 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். அதில், எம்ஜிஆரின்  திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன. அவரது திரையுலக பெருந்திறனும்  அனைவராலும் போற்றப்படுகிறது! ” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக நிறுவனமும், முன்னாள் முதல்வருமான மறைந்த எம்.ஜி.ராமச்சந்திரனின் 105வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் மோடி டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,

“பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். சமூகநீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார்.  அவரது திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன. அவரது திரையுலக பெருந்திறனும்  அனைவராலும் போற்றப்படுகிறது! ” என்று குறிப்பிட்டுள்ளார்.