த்ரிஷா கடந்த சில வாரங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் இருந்து சில காலம் விலகி இருக்கப் போவதாக தெரிவித்திருந்தார்.
இருப்பினும் வருத்தத்தில் இருந்த ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக நேற்று த்ரிஷா ஒரு புகைப்படத்தை பதிவிட்டு சமூக வலைதளத்திற்கு மீண்டும் திரும்பினார்.

ஒரு ஜிம் உடையில் அவர் மார்பில் குத்தி உள்ள நீமோ டாட்டு தெரியும் அளவிற்கு அந்த போட்டோ இருந்தது .
https://twitter.com/trishtrashers/status/1280856738183299075
இந்நிலையில் இந்த புகைப்படம் தன்னுடைய தோற்றத்தை காபி அடித்தது போல இருப்பதாக நடிகை மீரா மிதுன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/meera_mitun/status/1281316499769028610
“த்ரிஷா இது தான் உங்களுக்கு கடைசி எச்சரிக்கையாக இருக்கப் போகிறது. அடுத்த முறை நீங்கள் உங்களுடைய புகைப்படத்தை போட்டோஷாப் செய்து என்னை போலவே இருப்பதற்காக முடி உள்ளிட்டவற்றை மார்பிங் செய்து புகைப்படங்களை வெளியிட்டால் நான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியும். உங்கள் மனசாட்சிக்கு தெரியும் என நினைக்கிறேன். வளருங்கள். உங்களுக்கு என்று ஒரு வாழ்க்கையை தேடி கொள்ளுங்கள்” என மீரா மிதுன் தெரிவித்து உள்ளார்.