பெங்களுரூ:
சசிகலாவை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து மருத்துவர் குழு இன்று முடிவெடுக்க உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 5 நாட்களாக செயற்கை சுவாசம் இல்லாமல் சசிகலா இயல்பாக சுவாசிப்பதாகவும், அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு மற்றும் சர்க்கரை அளவு சீராக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்துள்ளதால், அவரை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து மருத்துவர்கள் குழு இன்று முடிவு செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel