சென்னை

த்திய அரசு சென்னை மாநகராட்சிக்கு வழங்க வேண்டிய ரூ. 350 கோடியை இதுவரை வழங்கவில்லை என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

நேற்று முன் தினம் சென்னை மாநகராட்சிக்கான நிதிநிலை பட்ஜெட் நேற்று முன் தினம் தாக்கல் செய்யப்பட்டு இன்று பட்ஜெட் மீதான விவாதம் எழுந்தது. விவாதத்தில் பாஜக மானன்ற உறுப்பினர் பேசும் போது சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் என்பது நிதி பற்றாக்குறையில் உள்ள பட்ஜெட்டாக ய்ள்ளதுஎனவும் குறிப்பாக சொத்து வரி உள்ளிட்ட வரிகள் நிதி பற்றாக்குறையில் உள்ள பட்ஜெட்டாக காணப்படுகிறது என்றும் கூறினார்,.

இதற்கு சென்னை மேயர் பிரியா,

“மத்திய அரசு சார்பில் சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்தினால் மட்டுமே சென்னைக்கு வழங்க வேண்டிய நிதியை வழக்குவோம் என மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிரது.  சொத்து வரியை ஆண்டு தோறும் 6 சதவீதம் உயர்த்துவதால் பொது மக்கள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.

ஆயினும் சென்னை மாநகராட்சி சார்பில் சொத்து வரி 6 சதவீதம் உயத்தப்பட்டு அதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும் கூட தற்போது வரை சென்னை மாநகராட்சிக்கு வழங்க வேண்டிய ரூ. 350 கோடியை மத்திய அரசு தற்போது வரை வழங்கவில்லை,

இதன் காரணமாக சென்னை மாநகராட்சியில் நிதி பற்றாக்குறையான ஒரு பட்ஜெட்டை அமைப்பதற்கான சூழல் இருக்கிறது .மத்திய அரசு சென்னை மாநகராட்சிக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்க வில்லை உங்கள் கட்சி சார்பாக நீங்களே அதனை பெற்றுத் தரவேண்டும்”

என்று பதில் அளித்தார்.