க்னோ

குஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது மருமகன் ஆகஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசு என அறிவித்துள்ளார்.

மாயாவதி பகுஜன் சமாஜ் கட்சித் தலைவராக இருந்து வரும் நிலையில் அவருக்கு பிறகு யார் என்கிற கேள்வி எழுந்தது. அப்போது தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்தார். ஆனால் கடந்த தேர்தல் கூட்டங்கள் அவரது தேர்தல் பிரச்சாரம் தவறாக இருந்ததாக கட்சியினர் எழுப்பிய புகாரை தொடர்ந்து அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

மாயாவதி கடந்த மே மாதம், மாயாவதி தனது மருமகனை கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்தி நீக்கி, அவர் தனது வாரிசு இல்லை என்று அறிவித்திருந்தார்  அவர், “கட்சியின் விருப்பத்தின் பேரில், எனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்தும், எனது அரசியல் வாரிசு என்ற பொறுப்பிலிருந்தும் நீக்கி உத்தரவிடுகிறேன்” என்று அறிவித்தார்

இன்று லக்னோவில்  நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சிக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மாயாவதி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும், தனது அரசியல் வாரிசாகவும் மீண்டும் தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.