சென்னை

மிழக அரசு உணவுத் துறை அதிகாரிகள் மே மாதத்துக்கான துவரம்பருப்ப் மற்றும் பாமாயிலை ஜூன் இறுதிவரை பெறலாம் என அறிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் மே,  ஜூன் ஆகிய இரண்டு மாதத்திற்கான துவரம் பருப்பு,  பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் விநியோகிக்கப்படவில்லை என தொடர்ச்சியாக புகார்கள் பெறப்பட்டு வருகிறது. உணவுத்துறை அதிகாரிகள்  நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதால் டெண்டர் கோருவதில் தாமதம் ஏற்பட்டதாகவும்,  அதன் காரணமாகவே துவரம் பருப்பு,  பாமாயில் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்

ஏற்கனவே மே மாதத்திற்கான பாமாயில்,  துவரம் பருப்பு பெறாத ரேஷன் அட்டைதாரர்கள் ஜூன் முதல் வாரம் வரை பெற்றுக் கொள்ளலாம் என உணவுத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.  தற்போது மே மாததிற்கான பொருட்களை ஜூன் இறுதி வரை பெற்றுக் கொள்ளலாம் என உணவுத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேல்லும்ஜூன் மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பும் இம்மாதம் இறுதிக்குள் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  அதற்கான பொருட்கள் அனைத்தும் நியாயவிலை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் இது தொடர்பாக அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.