டெல்லி:  அந்தமான் தீவு அருகே உள்ள நிக்கோபர் தீவுகளில் இன்று  6.5 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

இந்தியாவின் அந்தோமான்  நிக்கோபர் தீவுகள் பகுதியில் இன்று (ஜூலை 29) அதிகாலை 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது அதிர்ச்சியை ஏற்படுத்திய மக்கள் சுனாமி வர வாய்ப்பு இருப்பதாக பயந்தனர். ஆனால்,  ஆனால் சுனாமி  ஏற்ப வாய்ப்பு இல்லை என ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்த தகவலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மற்றும் சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

மேற்கு இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில், சபாங்கிலிருந்து மேற்கு-வடமேற்கே 259 கிலோமீட்டர் தொலைவில்,  நேற்று  நள்ளிரவு 12: 12 மணியளவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில்,  தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்ட தகவல்களின்படி வங்காள விரிகுடாவில் திங்கள் கிழமை நள்ளிரவு 11: 50 மணியளவில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி 6.82 டிகிரி வடக்கே அட்சரேகையிலும், 93.37 டிகிரி கிழக்கே தீர்க்கரேகையிலும் அமைந்திருந்தது. நிலநடுக்கத்தின் ஆழம் 10 கிலோமீட்டர் தொலைவில் பதிவானதால், அது ஆழமற்றதாக மாறியது என நிலநடுக்கவியல் மையம் தெரிவித்தது.