கொல்கத்தா.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நாடெங்கும் பாஜகவுக்கு எதிரான போக்கு நிலவுவதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் 7 மாநிலங்களுக்கு உட்பட்ட 13 சட்டசபை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் 10 இடங்களை இந்தியா கூட்டணி கைப்பற்றியது. மத்திய ஆளும் கட்சியான பாஜகவுக்கு வெறும் 2 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

குறிப்பாக மேற்கு வங்காளத்தில் 4 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது. முதல்வர் மம்தா பானர்ஜி இதற்கு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி இது குறித்து,

‘நாடெங்கும் பாஜகவுக்கு எதிரான போக்கு நிலவுகிறது என்பது மிகவும் தெளிவாக உள்ளது. இதற்கு முன் நடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் கூட பாஜகவுக்கு சாதகமாக இல்லை. ஆயினும் அவர்கள் விசாரணை அமைப்புகளின் ஆட்சியை மீண்டும் தொடங்கி இருக்கிறார்கள்’

என்று தெரிவித்துள்ளார்.