சென்னை: பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித்தடத்தில் இரண்டு நாள் சில மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
அதன்படி, சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், வரும் மார்ச் 27, 29 தேதிகளில் 19 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை சென்ட்ரல் கூடூர் வழித்தடத்தில் அமைந்துள்ள பொன்னேரி கவரப்பட்டு ரயில் நிலையம் இடையே வருகின்ற மார்ச் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிற்பகல் 12 முதல் மாலை 5:20 மணி வரை 4 மணி நேரம் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி வருகின்ற 27 மற்றும் 29ல் மூர் மார்க்கெட்டில் இருந்து காலை 10:30 11:35 மற்றும் மதியம் 1:40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்முடிபூண்டி செல்லும் மின்சார ரயில்களும் மறுமார்க்கத்தில் கும்மிடிப்பூண்டியிலிருந்து மதியம் 1 மணி மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு மூர் மார்க்கெட் வரும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
இதே போல மூர் மார்க்கெட்டில் இருந்து வரும் 27, 29 தேதிகளில் காலை 5.40, 10.15 மற்றும் பகல் 12.10 மணிக்கு புறப்பட்டு சூலூர் பேட்டை செல்லும் மின்சார ரயில்களும் மறு மார்க்கத்தில் சூலூர் பேட்டையில் இருந்து காலை 12.35 பகல் 1:15 மற்றும் மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு மூர் மார்க்கெட் வரும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
மேலும் சென்னை கடற்கரையில் இருந்து 27, 29 தேதிகளில் பகல் 12:40 2:40 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயிலும் மறுமார்கத்தில் கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 2.30, மாலை 3:15 மற்றும் 4.30 மணிக்கு புறப்பட்ட சென்னை கடற்கரை வரும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது
மேலும் வரும் 27, 29 ஆவது தேதிகளில் சூலூர் பேட்டையில் இருந்து காலை 8 10 மணிக்கு புறப்பட்டு நெல்லூர் செல்லும் பயணிகள் ரயிலும் நெல்லூரில் இருந்து காலை 10:20 மணிக்கு புறப்பட்டு சூலூர் பேட்டை வரும் பயணிகள் ரத்து செய்யப்படுகிறது
இது மட்டுமில்லாமல் ஆவடியில் இருந்து 27 29 தேதிகளில் காலை 4.25 மணிக்கு புறப்பட்டு மூர் மார்க்கெட் வரும் பயணிகள் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
மேலும் பகுதி நேரமாக ரத்து செய்யப்படும் ரயில்கள் விவரம் பின்வருமாறு,
செங்கல்பட்டில் இருந்து 27 29 தேதிகளில் காலை 9:55 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் சென்னை கடற்கரை கும்மிடிப்பூண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு சென்னை கடற்கரையில் நிறுத்தப்பட உள்ளது.
மேலும் கும்மிடிப்பூண்டியில் இருந்து வரும் 27, 29 தேதிகளில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் மின்சார ரயில் கும்மிடிப்பூண்டி சென்னை கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்”
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.