துரை

நா த க நிர்வாகி சாட்டை துரைமுருகனுக்கு மதுரை கிளை உயர்நீதிமன்றம்  ஜாமீன்ன் வழங்கி உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து விக்ரவாண்டி இடைத்தோ்தல் பிரசாரத்தின் போது நாம் தமிழா் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. எனவே திருச்சி சைபா் கிரைம் காவல்துறையிடம் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது.

மேலும் திருச்சி எஸ்.பி. வருண்குமார் தரப்பிலும் சாட்டை துரைமுருகன் மீது புகார் வழக்கு பதிவானது. இதில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு சாட்டை துரைமுருகன் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்  இன்று சாட்டை துரைமுருகன் முன்ஜாமீன் கோரிய மனு மீது மதுரை கிளை உயர்நீதிமன்ற அமா்வில் விசாரணை நடைபெற்றது.

விசாரணையில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் பற்றி எந்த இடத்திலும், சமூக வலைதளங்களிலும் தவறாக பதிவிடவில்லை என்றும், வருண்குமாரின் சமூக வலைதள பதிவுக்கு சில நெட்டிசன்கள் அவதூறாக பதிவு செய்துள்ளதாகவும் அதற்கு தாங்கள் பொறுப்பல்ல என்றும் சாட்டை துரைமுருகன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

காவல்துறை அதிகாரிகள் குறித்து தவறாக பதிவிட்ட நெட்டிசன்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்த துடன் நாம் தமிழர் கட்சி நிர்வாகி, சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுளார்.