சென்னை:  ஆழ்கடல் மற்றும் கடலோர  பாதுகாப்பு, எல்லைகள் கண்காணிப்பிற்கான CMS-03 செயற்கைகோளுடன் எல்விஎம் 3 ராக்கெட் நவம்பர் 2ம் தேதி விண்ணில் ஏவப்படும்  என இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த எல்விஎம்  ராக்கெட்(LVM3-M5) சந்திரயான் 3 அனுப்பிய ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.

கடலோர எல்லைகள் கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்புக்கான CMS-03 செயற்கைகோளுடன் எல்விஎம் 3 ராக்கெட் நவம்பர் 2ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

நாட்டின் தகவல் தொடர்பு சேவைகளை மேம்படுத்த இதுவரை 48 செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தி உள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு செலுத்தப்பட்ட ஜிசாட் 7 செயற்கைக்கோளின் ஆயுட்காலம் விரைவில் முடிவடைகிறது. அதற்கு மாற்றாக சுமார் ரூ.1,600 கோடியில் அதிநவீன சிஎம்எஸ்-03 செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

இந்த செயற்கைக்கோள் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நவம்பர் 2-ல் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் 4,,400 கிலோ கிலோ எடை கொண்டது.  . இது இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆகும்.

இந்த செயற்கைகோள்,  கடல் பகுதிகளில் முழுமையான தொடர்பு கவரேஜை வழங்குவதோடு, மனித விண்வெளி பயணங்கள் உள்ளிட்ட திட்டங்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ராக்கெட்டை ஏவுதலுக்கு முந்தைய இறுதிக்கட்ட  நடவடிக்கைகள் தொடங்கியுள்ள நிலையில், ராக்கெட் அக்டோபர் 26 அன்று ஏவுதளத்தில் நிலைநிறுத்தப்பட்டது. CMS-03 (GSAT-7R என்றும் அழைக்கப்படும்) என்பது மல்டி-பேண்ட் தொடர்பு செயற்கைக்கோள், . இது இந்திய கண்டம் மற்றும் விரிவான கடல் பகுதிகளுக்கு உயர் வேக தரவு தொடர்பு, வாய்ஸ், வீடியோ சேவைகளை வழங்கும். மேலும் இது  ஜியோசிங்கிரனஸ் டிரான்ஸ்ஃபர் ஆர்பிட் (GTO)க்கு ஏவப்படும் இந்தியாவின் மிகக் கனமான தொடர்பு செயற்கைக்கோள் இதுவாகும்.

இதுவரை புவிவட்டப் பாதைக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களில் சிஎம்எஸ்-03 அதிக எடை கொண்டதாகும். இந்த செயற்கைக் கோளில் விரிவுப்படுத்தப்பட்ட மல்டி பேண்ட் தொழில்நுட்ப வசதிகள் உள்பட பல்வேறு நவீன அம்சங்கள் உள்ளன.

இந்த செயற்கைகோள்  இந்திய தேசிய கடற்படைக்கானது இது கடல் பாதுகாப்பு, கண்காணிப்பு, துணை வழிகாட்டுதல் போன்றவற்றை வலுப்படுத்தும். என இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும்,  “இது இந்தியாவின் விண்வெளி தொடர்பு திறனை உலக அளவில் உயர்த்தும்” என தெரிவித்துள்ளார்.

LVM3-M5 ராக்கெட், 2023 ஜூலை அன்று சந்திரயான்-3 இஷன் ஏவியதன் பிறகு இரண்டு ஆண்டுகளுக்குப் பின் முதல் முதலாக பறக்க உள்ளது. இந்த ராக்கெட், 4 டன் வரை GTOக்கு ஏற்றும் திறன் கொண்டது. ஏவுதல் நேரம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் அக்டோபர் 26 அன்று ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் இணைக்கப்பட்டு ஏவுதளத்தில் வைக்கப்பட்டது. இஸ்ரோ, “முந்தைய LVM3 பறக்கல் சந்திரயான்-3 மூலம் சந்திரனின் தெற்கு முனையில் முதல் தரையிறங்குதல் மூலம் சாதித்தது” என நினைவூட்டியுள்ளது.

இந்த ஏவல், இந்தியாவின் விண்வெளி திட்டங்களில் முக்கிய மைல்கல். அடுத்து, அமெரிக்காவுடனான NISAR (NASA-ISRO SAR) திட்டம் இரண்டு-மூன்று வாரங்களில் செயல்படத் தொடங்கும்.

இஸ்ரோவின் இந்த முயற்சி, கடல் பாதுகாப்பு மற்றும் தொடர்பு துறைகளில் இந்தியாவின் சுயாட்சியை உறுதிப்படுத்தும். விஞ்ஞானிகள், “CMS-03, கடல் பகுதிகளில் உள்ள போர்க்கப்பல்கள், கப்பல்களுக்கு நிகழ்நேர தொடர்பை வழங்கும்” என்றும்,  இந்திய கடலோர எல்லைகளை கண்காணிப்பதுடன், போர்க் கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு இடையே தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்தவும் இந்த செயற்கைக் கோள் உதவி செய்யும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.