லாஸ்ஏஞ்சல்ஸ்:

லிபோர்னியா மாநிலம் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் பிரபலமான 10வழிச்சாலையின் குறுக்கே வன விலங்குகளை பாதுகாக்கும் நோக்கில் உலகின் மிகப்பெரிய வனவிலங்கு பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், வனவிலங்குக்ள்,குறிப்பாக , மலை சிங்கங்களை அழிவிலிருந்து காப்பாற்றவும் 10 வழி நெடுஞ்சாலையில் உலகில் மிகப் பெரிய வனவிலங்குகள் நடைபாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின்  கலிபோர்னியா மாகாணத்தில் தெற்கு பகுதியில் உள்ள அகௌரா ஹில்ஸ் என்ற நகரம் வன விலங்குகளின் புகழிடமாக திகழ்கிறது. இங்குள்ள சிங்கம் உள்பட வன விலங்குகளை பாதுகாக்கும் பொருட்டு கலிபோர்னியா மாநி  மலைச்சிங்கம் உள்பட  பலவிலங்குகள் வாழ்விட மாக உள்ள இருக்கிறது.

இந்த பகுதியில் அமைந்துள் 10வழி நெடுஞ்சாலையில் தினமும் தோராயமாக 10 லட்சம் வாகனங் கள் செல்கின்றன. இதன் காரணமாக வாகனங்களில் சிக்கி வனவிலங்குகள் அடிபடு வதாலும், விபத்துக்கள் ஏற்படுவதாலும், அதை தடுக்கும் நோக்கிலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், வன விலங்குகளை பாதுகாக்கும்  நோக்கிலும், சாலையின் குறுக்கே, வன விலங்குகளுக்காக 87 மீ நடைபாதை இயற்கை எழில்சூழ்ந்த வகையில் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.

வனவிலங்குகளுக்கு பாதிப்பில்லாமல் அவை சுதந்திரமாக சுற்றித்திரியும் விதத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முடிவு எடுத்த முடிவைத் தொடர்ந்து, வன விலங்குகள் நெடுஞ்சாலையை கடக்க மிகப்பெரிய நடைபாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதற்காக  அநாட்டு அரசு 625 கோடியே 12 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இந்தப் பாலத்தை கட்ட திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளை தொடங்கி உள்ளது. இந்த பாலம்,  2024 ஆம் ஆண்டு திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.