ஜப்பான் அரச குடும்பமும் அதன் மருத்துவர்களும் ஓரியண்டல் எனும் கிழக்காசிய மருத்துவத்தை 1000 ஆண்டுகளுக்கும் மேலாக பொக்கிஷமாக காத்துவருகின்றனர்.

இதுகுறித்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் டெனிஸ் நோபல் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரையில் கூறியிருப்பதாவது : இந்தியா, சீனா, கொரியா மற்றும் வேறு சில இடங்களில் இருந்து பெறப்பட்ட மூலங்களைத் தொகுத்து ‘மருத்துவ மருந்துகளின் இதயம்’ என்ற பெயரில் 30 பகுதிகளைக் கொண்ட மருத்துவ பொக்கிஷத்தை டோக்கியோ அரண்மனையில் உள்ள காப்பகத்தில் பாதுகாத்து வருகின்றனர். இதில் பல அசல் ஆவணங்கள் தொலைந்துவிட்டன அல்லது அழிக்கப்பட்டுள்ளது, இந்த காப்பகத்தில் உள்ள ஆவணங்களை 2012 ம் ஆண்டு ஆய்வு செய்ததில் கிடைத்த தகவல்கள் நீண்ட ஆயுளுக்காக படுக்கையறையில் கையாள வேண்டிய மன்மத கலை குறித்த குறிப்புகளும் உள்ளது.

மூலிகை வைத்தியம் மற்றும் ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கை முறை உதவிகள் மட்டுமல்லாமல், பாலியல் ஆற்றலை மையமாகக் கொண்டு ஜிங்கி (உயிர் சக்தி) உருவாக்கம் மற்றும் பாதுகாப்பிற்கான வழிமுறைகளை கூறியிருக்கிறது. கிழக்கு ஆசியாவில் குறைந்தது 2,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இந்த மருந்துகள் விந்தணுவை இழக்காமல் உச்சத்தை அடைய உதவியதால் இது மேற்கத்திய கருத்துக்களுக்கு கிட்டத்தட்ட எதிர்மறையாக இருந்தன.

ஜப்பானிய கவிதை மற்றும் இலக்கியத்திற்கான பொற்காலம் என்று போற்றப்படும் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, ஹீயன் காலத்தில், கவிஞர் சீ ஷோனகன் (c966-c1025) ‘தி பில்லோ புக்’ (தி தலையணை புத்தகம்) எழுதினார், அதே சமயம் அரசவையில் இருந்த சக பெண்மணியான முரசாகி ஷிகிபு (c978-c1014) உலகின் முதல் மற்றும் சிறந்த நாவல்களில் ஒன்றான ஒரு இளவரசனின் சாகச காதல் வாழ்க்கை தொடர்பான ‘தி டேல் ஆஃப் செஞ்சி’யை எழுதினார்.

இந்த படைப்புகள் பண்டைய ஜப்பானில் பொதுவான பாலியல் உறவுகளுக்கான இயல்பான அணுகுமுறையை வெளிப்படுத்துகின்றன. இது சீனாவிலும் இயல்பானது என்பதை ஹுனான் மாகாணத்தில் உள்ள  மவாங்டுய் என்ற இடத்தில் நடைபெற்ற கல்லறை அகழ்வாராய்ச்சியில் கிடைத்த கி மு 200 ம் நூற்றாண்டைச் சேர்ந்த காதல் கலை பற்றிய நூல்களில் இருந்து தெளிவாகிறது. அந்த நூல்களில் உள்ள ‘தி யூனியன் ஆஃப்  யின் மற்றும் யாங்’ என்ற கவிதை உலகம் பாதுகாத்த முதல் பாலியல் கையேடாக இருக்கலாம். இந்த படைப்புகள் முழுவதும், வண்ணமயமான உருவகங்கள் உடலுறவின் மகிழ்ச்சிக்கான அவசரமற்ற மற்றும் கவனமான அணுகுமுறையை விவரிக்கின்றன. உடலில் உள்ள மர்மமான ஆற்றல் மையங்களைப் பற்றிக் கொள்வதில் தொடங்கி, மிக மெதுவாகவும் மென்மையாகவும் இயக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

ஜப்பானிய அரசவை மருத்துவர் தம்பா யசுயோரி 984 இல் எழுதிய சிறந்த தொகுப்பு சிறந்த உதாரணமாக திகழ்கிறது. சீன மதமான தாவோயிசத்தில் குறிப்பிடப்படும் முக்கிய நபரான யெல்லோ எம்பரருக்கு மூன்று பெண்கள் வழங்கிய போதனைகள் மூலம் சீனாவின் உன்னதம் தம்பா என்பவரின் தலைசிறந்த படைப்பின் மூலம் விவரிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் உள்ள நவீன மருத்துவ நிறுவனங்களின் முன்னணி உறுப்பினர்களுடன் சேர்ந்து 2018 இல் மீண்டும் ஆய்வு செய்த போது இந்த மூன்று பெண்களை பற்றிய குறிப்புகளை காண முடிந்தது. அவர்களில் ஒருவர் சீனாவின் ஏவாள் என்று போற்றப்படும் சூ-னு என்பவர் கி.பி. 200ம் நூற்றாண்டின் பழமையான கவிதைகளில் ஒன்றைப் பயன்படுத்துகிறார் அந்த கவிதையில் “ஆன்மா அமைதியடைய நான்கு முறை கூடலும், ஒன்பது முறை கூடுவதால் நீண்ட ஆயுள் கிடைக்கும்” என்றும் ஒவ்வொரு முறை கூடுவதற்கும் உண்டான பலன்களை கூறியிருக்கிறது.

கவிதையில் உள்ள ஒவ்வொரு வரியும் ஒரே நபருடனான தனிப்பட்ட நெருக்கமான செயலாகவோ அல்லது பல மனைவிகளைக் கொண்ட மன்னர்களின் வெவ்வேறு நபர்களுடனான செயலைக் குறிப்பதாக இருக்கலாம். நிச்சயமாக, இந்த கவிதை, காதல் கலைகளில் பல பண்டைய சீன மன்னர்களின் நோக்கம் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்கான பொதுவான முன்னேற்றத்தை ஊக்குவிப்பதாகும்.

மரபணு, நோய்கள் உள்ளிட்ட அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையது என்பதே இந்த கவிதையின் ஆழமான உண்மை. மரபணுக்களுக்கும் நோய்களுக்கும் இடையிலான தொடர்புகளைப் பயன்படுத்தி நவீன விஞ்ஞானம் துல்லியமாக இதைத்தான் கண்டறிந்துள்ளது. பெரும்பாலான மரபணுக்கள் பெரும்பாலான நோய்களுக்கு பங்களிக்கின்றன. மரபணு வரிசைமுறையைப் பயன்படுத்தும் சில நவீன விஞ்ஞானிகள் சர்வவல்லமைக் கோட்பாட்டை உருவாக்கும் வரை செல்கிறார்கள், இது அனைத்து மரபணுக்களும் ஆரோக்கியம் மற்றும் நோய் நிலைகளுக்கு ஏதோ ஒரு வகையில் பங்களிக்கின்றன. இது வேறு வழியிலும் வேலை செய்கிறது.

மரபணு வெளிப்பாடு எபிஜெனெடிக் நிலைகளால் கட்டுப்படுத்தப்படுகிறது – வெளிப்புற சூழல் மரபணுக்களை மேலே அல்லது கீழே மாற்றும் போது. நம்மிடம் ‘சுயநல’ மரபணுக்கள் இல்லை. சுயநலம் அல்லது இரக்கம் நமது ஒருங்கிணைந்த சுயத்திலிருந்து வருகிறது, டிஎன்ஏ போன்ற உயிரி மூலக்கூறுகளிலிருந்து அல்ல. இதனை வெளிப்படுத்த விஞ்ஞானிகளும் இன்று உருவகத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

ஜப்பானிய பதிப்பும் பழங்கால சீன நூல்களும் விலங்கில் இருந்து பெறப்பட்ட பொருட்கள் மற்றும் உலோகத்தாலான நச்சு பொருட்கள்  ஆகியவற்றை மருத்துவ பயன்பாட்டில் இருந்து தவிர்த்து, மூலிகை, ஊட்டச்சத்து மற்றும் பாலியல் உறவு மட்டுமே தீர்வாக கூறப்பட்டுள்ளன.

ஜப்பானிய காம சூத்திரம்….. அடுத்த பாகம்