டெல்லி: ‘நமது ஜனநாயகத்தை மேலும் துடிப்பானதாக மாற்றுவோம்’ என்று பிரதமர் மோடி வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

18வது மக்களவைக்கான இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட  8 மாநிலங்களை சேர்ந்த 57 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி நேற்றுமுன்தினம் பாராளுமன்ற தேர்தலுக்கான இறுதிகட்ட பிரசாரத்தை முடித்துக்கொண்டு கன்னியாகுமரியில் தியானத்தில் ஈடுபட்டுள்ளா

இந்த நிலையில் பிரதமர் மோடி  தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  இ 2024 மக்களவைத் தேர்தலின் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும்,  இளம் மற்றும் பெண் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.  நாம்  ஒன்றாக இணைந்து,  நமது ஜனநாயகத்தை மேலும் துடிப்பாகவும், பங்கேற்பு மிக்கதாகவும் மாற்றுவோம் என்று பதிவிட்டுள்ளார்.