சேலம்

வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி அன்று சேலம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி அன்று தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது.  எனவே அன்று சேலம் மாவட்டத்துக்கு உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந்தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதன்படி அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படாது”.

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.