திரிபுராவில் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், கம்யூனிச தலைவர்களில் ஒருவரான லெனின் சிலை அகற்றப்பட்டது.  இந்த நிலையில்,  பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான,  எச்.ராஜா, “ இன்று திரிபுராவில் லெனின் சிலை.. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வெ.ரா. சிலை” என்ற அர்த்தத்தில் பதிவிட்டிருந்தார்.

 

அதே போல பா.ஜ.க.வின் இளைஞர் பிரிவான யுவ மோர்ச்சாவின்  துணைத் தலைவரான எஸ்.ஜி. சூர்யா என்பவர், “தமிழகத்தில் ஈ.வெ.ரா. சிலையை வீழ்த்த காத்திருக்கத் தேவையில்லை” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதவிட்டுள்ளார்.

இது போல, பாஜக பிரமுகர்கள்  பலரும் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.