மதுரை: கஞ்சா வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்ட கஞ்சா ரவுடிகள், போலீசார் முன்னிலையிலேய, நாங்கள் விரைவில் “வெளியே வருவோம்… நீதிபதியை கொல்லுவோம்” என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே தமிழ்நாடு கஞ்சா போன்ற போதை பொருட்கள் கடத்தல், விற்பனை மற்றும் போதைக்கு அடிமையானோர் அதிகரித்துள்ள மாநிலமாக திகழ்ந்து வரும் நிலைல், கஞ்சா கடத்தல் வழக்கில் 12 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்ட ரவுடிகள், காவல்துறையினர் முன்னிலையிலேயே நீதிமன்றத்திற்குள்ளேயே நீதிபதியை கொல்லுவோம் என எச்சரிக்கை விடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற குற்றவாளி களை முலையிலேயே கிள்ளி எரிய வேண்டியது அவசியம் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

மதுரை வில்லாபுரம் கிழக்குத் தெரு முனியாண்டி கோவில் அருகில் உள்ள கருவேலங்காட்டுக்குள், கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவல்களைத் தொடர்த்நது, கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதியன்று அப்பகுதிக்கு சென்ற மதுரை கீரைத்துறை காவல்துறையினர் அங்கு மரத்திற்கு கீழ் வெள்ளை சாக்குடன் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந் 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த சாக்கில் இருந்தது கஞ்சா என்பது தெரிய வந்தது. இதையடுத்து, த மதுரை புதுஜெயில் ரோடு முரட்டம்பத்திரி பகுதியை சேர்ந்த சகோதரர்களான பாண்டியராஜன் மற்றும் அவரது சகோதரர் பிரசாந்த் மற்றும் பாண்டியராஜனின் மனைவி சரண்யா ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
மேலும் விசாரணையின்போது, இந்த கஞ்சா மூட்டையை மதுரை காமராஜபுரம் பகுதியை சேர்ந்த பிரபல ரௌடியான வெள்ளைக்காளியின் அண்ணன் சின்னமுனுசு மகன் சண்முகவேலு இரவு நேரத்தில் வந்து 2கொடுத்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் அந்த கஞ்சாவை ஆந்திராவில் இருந்து வாங்கி வந்ததாகவும், அதன்பிறகு திருச்சியில் கஞ்சா வழக்கில் சண்முகவேல் சிறைக்கு சென்றுவிட்டார் என கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக பாண்டியராஜன் மற்றும் அவரது சகோதரர் பிரசாந்த் மற்றும் பாண்டியராஜனின் மனைவி சரண்யா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், நேற்று வழக்கின் இறுதிகட்ட விசாரணை நீதிபதி ஹரிஹரகுமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மூவர் மீதான குற்றம் நிருபிக்கப்பட்ட நிலையில் பாண்டியராஜன் மற்றும் அவரது சகோதரர் பிரசாந்த் மற்றும் பாண்டியராஜனின் மனைவி சரண்யா ஆகிய மூவருக்கும் தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து மூவரையும் சிறையில் அடைப்பதற்காக காவல்துறையினர் அழைத்து செல்ல தயாரானர். அப்போது நீதிமன்றத்தின் உத்தரவை கேட்ட குற்றவாளி களான பாண்டியராஜன் மற்றும் அவரது சகோதரர் பிரசாந்த் ஆகிய இருவரும் திடிரென நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, நிதீமன்றத்தின் கண்ணாடி களை கையால் உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் கைகளில் ரத்தம் சொட்ட சொட்ட கிளாமர் காளி கொலை வழக்கில் எதற்கு சுபாஸ் சந்திரபோசை என்கவுண்டர் செய்தீர்கள் என போலீசாரை மிரட்டிய தோடு, நான் வெள்ளைக்காளி பசங்க தான், நாங்கள் ஜெயிலில் இருந்து வெளியில் வந்து நீதிபதியை கொல்லாமல் விடமாட்டேன் என கொலை மிரட்டல் விடுத்தனர்.
அப்போது காவல்துறையினர் இறுகபிடித்தபோதும் துள்ளிகுதித்து தப்பியோட முயன்று, காவல்துறையினர் தடுத்ததால் காவல்துறையினரையும், வழக்கறிஞர் களையும் ஆபாசமாக பேசியதோடு தொடர்ந்து மிரட்டியபடி சென்றனர். அதனை பார்த்த காவல்துறையினரே மிரண்டுபோய் செய்வதறியாது திகைத்து நின்றனர். பின்னர் இருவரையும் பாதுகாவலுக்கு வந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
நீதிமன்றத்திலயே எவ்வித அச்சமுமின்றி நீதிபதிக்கே கொலை மிரட்டல் விடுத்ததோடு, காவல்துறை, வழக்கறிஞர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீதிபதிக்கே பாதுகாப்பற்ற நிலைமையை உருவாக்கும் வகையில் மிரட்டல் விடுத்த இது போன்ற குற்றவாளிகள் மீது காவல்துறையினர் இரும்புகரம் கொண்டு கடும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் கொடிக்கட்டி பறப்பதும், ரவுடிகளும், பொரம்போக்குகளும், காவல்துறையினருக்கும், உயர் அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதும் அதிகரித்து வரும் நிலையில், தற்போது நீதிபதிகளுக்கு நேரடி மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.