திருப்பதி

டந்த 2024 ஆம் ஆண்டு திருப்பதி கோவில் உண்டியல் மூலம் ரூ.1365 கோடி கிடைத்துள்ளது.

தினந்தோறும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அதிலும் குறிப்பாக விசேஷ நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து காணப்படும்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் திருப்பதியில் உண்டியல் காணிக்கையாக பணம், நகை, ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை செலுத்துகின்றனர். கடந்த 2024-ம் ஆண்டில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

திருப்பதி தேவஸ்தானம்,

”கடந்த 2024 ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை, பக்தர்கள் மொத்தம் 1,365 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை செலுத்திஉள்ளனர்.

2024-ல் திருப்பதி ஏழுமலையானை தரிசித்த பக்தர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 55 லட்சம்., தலை முடி காணிக்கை செலுத்திய பக்தர்களின் எண்ணிக்கை 99 லட்சம்,

2024-ல் திருப்பதியில் லட்டு விற்பனை எண்ணிக்கை 12 கோடியே 14 லட்சம்”

எனத் தெரிவித்துள்ளது.