திருவண்ணாமலை

மாசி மாத பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான்னோர் விடிய விடிய கிரிவலம் செய்துள்ளனர்

மலையையே சிவனாக வழிபடுவதால் திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். மாசி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை சுமார் 11.40 மணியளவில் தொடங்கியது.

கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் பகலில் குறைந்தே காணப்பட்டாலும் மாலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கி லட்சக்கணக்கான பக்தர்கள் இரவில் கிரிவலம் சென்றனர்.

தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடக, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கார், வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் கிரிவலம் செல்வதற்காக திருவண்ணாமலைக்கு வந்தனர். பக்தர்கள் கிரிவலம் தொடங்கும் முன்பு பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் எதிரில் ஏராளமானோர் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டனர். சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்திற்கும் மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர். பக்தர்கள் நேற்று பகலில் வெயில் வெளுத்து வாங்கியது. வெயிலையும் பொருட்படுத்தாமல் வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

பலர் கிரிவலப்பாதையில் பலர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் சுமார் 12.57 வரை பவுர்ணமி உள்ளதால் இன்று காலை வரையில் விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம் சென்றபடி காணப்பட்டனர்.   அங்கு தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு தண்ணீர் வாகனத்துடன் தயார் நிலையில் உள்ளனர்.