டெல்லி: ஹெலிகாப்டர் விபத்தில் கடந்த 8ந்தேதி உயிரிழந்த முப்படை தளபதி பிபின்ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் அஸ்திகளை அவரது மக்கள்  கங்கையில் கரைத்தனர்.

கடந்த 8ந்தேதி அன்று ராணுவ ஹெலிகாப்டரில் வெலிங்டன் ராணுவ முகாமுக்கு வருகை தந்த முப்படை தளபதியின் ஹெலிகாப்டர், குன்னூர் பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில், முப்படைகளின் முதன்மை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களுக்கு அவரது மக்கள் நேற்று இறுதிச்சடங்கு நடத்தினர். பின்னர்  ராணுவ மரியாதையுடன் அவர்களது உடல்கள் தகனம் செய்யப்பட்டது.

இதையடுத்து,  அவர்களது அஸ்தி பெறப்பட்டு, அவர்களது அஸ்தி மகள்கள் கிருத்திகா, தாரிணியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை பெற்றுக் கொண்ட அவர்கள் பெற்றோரின் அஸ்தியை கங்கை நதியில் கரைத்துள்ளனர்.  அவரது சொந்த மாநிலமான உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார் பகுதியில் பாய்ந்தோடும் கங்கையில் கரைக்கப்பட்டது.