தர்மபுரி: கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தில், அரசு  பள்ளியில் பணியாற்றி வந்த என்சிசி ஆசிரியர் கைது செய்யப்பட்டு உள்ளார். இதன்மூலம் கைதானவர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

 

கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் கிராமத்தில் செயல்பட்டு வரும் கிங்ஸ்லி என்ற கிறிஸ்தவ தனியாா் பள்ளியில் நடைபெற்ற தேசிய மாணவா் படை போலி முகாமில் பங்கேற்ற 8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு  முகாம் பயிற்சியாளரான சிவராமன் என்பவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானாா். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்த புகாரின் பேரில்,  சிவராமன் (நாதக)  பள்ளியின் தாளாளா், முதல்வா், ஆசிரியா்கள், பயிற்சியாளா்கள் என 11 பேரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சிவராமன் தற்கொலை செய்து கொண்டார். அதையடுத்து அவரது தந்தையும் மரணம் அடைந்தார்.  இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற விசாரணின்போது, , கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களில் தேசிய மாணவா் படை போலி முகாம்கள் நடத்தப்பட்டதாகவும், அதில் பங்கேற்ற மாணவிகள் சிவராமனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாகவும் புகாா்கள் எழுந்தன.

இந்தச் சம்பவம் குறித்து தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் ஐ.ஜி. பவானீஸ்வரி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவும், சமூக நலத் துறை செயலாளா் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையிலான பல்நோக்கு குழுவினரும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த பாலியல் சம்பவத்தில், தலைமறைவாக இருந்த சுதாகா், கமல் ஆகிய இருவரும் அண்மையில் கைது செய்யப்பட்டனா். இதன் தொடா்ச்சியாக, சிவராமனுக்கு உதவியதாக அரசுப் பள்ளி என்சிசி ஆசிரியர் கோபு (47) என்பவரையும்  போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறப்பு புலனாய்வுக் குழுவினா் கைது செய்துள்ளனர்.  இதன் மூலம் கைது எண்ணிக்கை  15 ஆக உயர்ந்துள்ளது.

கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரம்: கைது செய்யப்பட்ட சிவராமன், அவரது தந்தை உயிரிழப்பு…