கொல்கத்தா

கொல்கத்தா விமான நிலையம் டானா புயலுக்காக 15 மணி நேரம் மூடப்படுகிறது.

மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகி இந்த புயலுக்கு ‘டானா’ புயல் என பெயரிடப்பட்டுள்ளது.

இன்று இரவு அல்லது நாளை அதிகாலை டானா புயல் வடக்கு ஒடிசா-மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில், பூரி-சாகர் தீவுகளுக்கு இடையே அதிகாலையோ கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையம்,இன்று மாலை 6 மணி முதல் நாளை இரவு 9 மணி வரை 15 மணி நேரத்திற்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.