டெல்லி

நேற்று நடந்த மோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்றுள்ளார்.

நேற்றிரவு ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா தேசிய கீதத்துடன் தொடங்கியது. பின்னர் 3 ஆம் முறையாக பிரதமராக மோடி பதவியேற்றுக்கொண்டார்.

மோடிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமானமும் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பினை ஏற்று உலக தலைவர்கள் இந்தியா வந்துள்ளனர்.

ஆனால் ராகுல்காந்தி, சோனியாகாந்தி ஆகியோரை அழைக்கவில்லை என கூறப்பட்டது.  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விழாவில் பங்கேற்பார் என தகவல் வெளியானது. அதன்படி மோடியின் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்றார்.