டெல்லி:  பேரழிவை ஏற்படுத்தி உள்ள கேரள மாநிலம் வயநாட்டு நிலச்சரிவைத்  தொடர்ந்து இமாச்சல பிரதேம் மற்றும் உத்தரபாண்டிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கேதர்நாத்தில் நிரச்சரிவு காரணமாக 200 யாத்ரிகர்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் மேக வெடிப்புகள் மற்றும் நிலச்சரிவுகள் போன்றவை வழக்கமான நிகழ்வுகள் என்றாலும் சமீபகாலமாக அதிகரித்து வருவதற்கு,  தீவிர வானிலை நிகழ்வுகள் மற்றும்   காலநிலை காரணிகள் மற்றும் மனித செயல்பாடுகள்  காரணம் என்று கூறப்படுகிறது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கேரளாவின் வயநாட்டில் கடந்த சில நாட்களாக மிக கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 280 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்று நாட்களாக மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்பணிகள் மேலும் ஒரு வாரத்திற்கு தொடரலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், இமாச்சலப் பிரதேசத்திலும், உத்தரகாண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட  கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது.   இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்த்தின் ராஜ்வான் மாவட்டத்தில்  திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் கனமழை கொட்டி தீர்த்திருக்கிறது. கனமழை நிலச்சரிவை ஏற்படுத்தியுள்ளன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். 11 பேரை காணவில்லை. பல வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்திருக்கின்றன. அங்கு மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், தொடர் மழை காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. செல்போன் சேவை துண்டிக்கப்பட்டிருப்பதால் அங்குள்ளவர்களை தொடர்புகொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது.

மாநில தலைநகரில் நேற்று இரவு கனமழை பெய்ததால், அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட புறநகர் பகுதியான விகாஸ்நகரில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது,  விகாஸ் நகரில் உள்ள பெட்ரோல் பம்ப் அருகே உள்ள மரங்கள் பைபாஸ் சாலையில் விழுந்தன. இதேபோல் மெஹ்லி – ஜுங்கா சாலையில் பெல்ஸ் இன்ஸ்டிடியூட் அருகே மற்றொரு நிலச்சரிவும் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதுபோல உத்தரகாண்டின் சில பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.  மேகவெடிப்பு  காரணமாக பெய்த கடுமழை, கேதார்நாத்தில் நிலச்சரிவைத் தூண்டி, நடைபாதையை சேதப்படுத்தியது, 200 யாத்ரீகர்கள் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தரகாண்டின் தெஹ்ரி மாவட்டத்தில் நிலச்சரிவை ஏற்படுத்திய மற்றொரு கனமழை நிகழ்வு பல வீடுகளையும் கடைகளையும் அடித்துச் சென்ற சில நாட்களுக்குப் பிறகு அவரது பேரழிவு வந்துள்ளது. இந்த சம்பவத்தில், 42 வயது சரிதா தேவி என்ற பெண்ணும், அவரது 15 வயது மகள் அங்கிதாவும், இடிபாடுகளுக்குள் பரிதாபமாக புதைந்தனர். டோலி கிராமத்தில் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து அவர்களது உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டனர்.

இவர்களது வீட்டின் பின்புறம் இருந்த தடுப்பு சுவர் இடிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவங்களின் வெளிச்சத்தில், உத்தரகாண்ட் அரசு சார்தாம் யாத்திரை யாத்ரீகர்களுக்கான பாதுகாப்பு ஆலோசனையை வெளியிட்டுள்ளது, மாநிலம் முழுவதும் கனமழையின் முன்னறிவிப்புகளுக்கு மத்தியில் அவர்களின் பயணங்களை தாமதப்படுத்து மாறு வலியுறுத்தியுள்ளது. பக்தர்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும், நிலைமைகள் பாதுகாப்பானதாகக் கருதப்பட்டால் மட்டுமே பயணத்தைத் தொடங்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில்,   இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது இப்பகுதியில் சமீபத்திய மேகவெடிப்பு சம்பவங்களின் தொடர்ச்சியாகும். முன்னதாக, தெஹ்ரி கர்வால் மாவட்டத்தின் கன்சாலி பகுதியில் உள்ள ஜகன்யாலியில் மேக வெடிப்பில் இருவர் இறந்து கிடந்தனர், மற்றொருவர் காயமடைந்தார். உயிரிழந்தவர்கள் பானு பிரசாத் (50), அனிதா தேவி (45) என அடையாளம் காணப்பட்டனர்.

மீட்பு பணிகளுக்காக தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்திருக்கின்றனர்.