நடிகர் சித்திக் மீது கேரள காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது .

பாலியல் புகார் தொடர்பான வழக்கில் கேரள உயர்நீதிமன்றத்தில் நடிகர் சித்திக்-கிற்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்டதை அடுத்து அவர் தலைமறைவானார்.

இதையடுத்து, முன்ஜாமீன் கேட்டு நடிகர் சித்திக் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

தன் மீதான பலாத்கார வழக்கின் பின்னணியில் மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கமான AMMA மற்றும் பெண்கள் சினிமா கூட்டமைப்பு WCC ஆகியவை இருப்பதாக சித்திக் தரப்பு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட சம்பவம் நடந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, உயர் நீதிமன்றத்திலும், அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்திலும், புகார் எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டிய நடிகர் சித்திக் 65 வயதான தனக்கு பேரக்குழந்தைகள் இருப்பதாகவும் பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ள தன் மீது வேறு எந்த குற்ற வழக்கும் இல்லை என சித்திக் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் தலைமறைவாக உள்ள நடிகர் சித்திக்கைக் கண்டுபிடிக்க கேரள போலீசார் ஊடகங்களில் லுக்அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளனர்.