கேரள முதல்வர் பினராயி விஜயன் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இது குறித்து முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பினராயி விஜயன் சுமார் பத்து நாட்கள் வெளிநாட்டில் இருப்பார் என்று கூறப்பட்டுள்ள நிலையில் அவருக்கு அளிக்கப்பட இருக்கும் சிகிச்சை குறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

சுகாதாரத் துறையில் உள்ள குறைபாடுகள் குறித்து கேரளா சர்ச்சையை சந்தித்து வரும் நேரத்தில், பினராயி விஜயன் அமெரிக்காவுக்குச் சென்றதற்காக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
தவிர, அடுத்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு அவர் ஆன்லைனில் தலைமை தாங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள மேயோ கிளினிக்கிற்கு பினராயி விஜயன் இதற்கு முன் சிகிச்சைக்காகச் சென்றிருந்தார். அப்போதும் கூட, முதலமைச்சர் தனது பொறுப்பை வேறு எந்த அமைச்சருக்கும் தற்காலிகமாக ஒப்படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.