டெல்லி

ஜூலை 12 வரை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்ர்.

அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக கெஜ்ரிவாலை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கெஜ்ரிவாலை 3 நாட்கள் சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் நேற்றோடு அவரது காவல் முடிவடைந்தது.

எனவே நேற்று கெஜ்ரிவாலை சி.பி.ஐ. அதிகாரிகள் டெல்லி ரோஸ் அவென்யூநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ரோஸ் அவென்யூ நீதிமன்றம் கெஜ்ரிவாலை 14 நாட்கள்(ஜூலை 12-ந்தேதி வரை) நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.