சென்னை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக கதிரேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பல்கலைக்கழக துணைவேந்தரான ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டு உள்ளார்.

அண்ணாமலை பலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள கதிரேசன், 36 ஆண்டுகாலம் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் கதிரேசன் தலைவராகப் பொறுப்பு வகித்தவர். மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் இயக்குநராகவும் ஆர்.எம் கதிரேசன் இருந்துள்ளார்.
துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள கதிரேசன் 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார்.
[youtube-feed feed=1]