
சென்னை:
மத்திய முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐ.என்.எக்ஸ். மீடியா என்ற நிறுவனத்துக்கு சாதகமாக சட்டவிரோத பண பரிவர்தனை செய்ததாக அவர் மீது சி.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ளது.
இதே வழக்கில் அவரது ஆடிட்டர் பாஸ்கர்ராமன் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கார்த்திக் சிதம்பரம் மனு செய்த முன்ஜாமீன் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நீதிமன்ற அனுமதி பெற்றி கார்த்தி சிதம்பரம் லண்டன் சென்றிருந்தார். இன்று காலை திரும்பிய உடனே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel