சென்னை: மேகதாது பகுதியில் கர்நாடக அரசு கட்டியுள்ள தடுப்பணையை இடிக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தமிழ்நாடு அரசுக்கு விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார். மேலும், தமிழக விவசாயிகளுக்கு எதிராக செயல்படுங்ம,  கர்நாடகாவில் துணைமுதல்வர் சிவகுமார் தம்பி சநாடாளுமன்ற தேர்தலில்  தோல்வியை சந்தித்ததுபன்ற நிலைமை, , டெல்டாவுக்கு சொந்தக்காரர் எனக் கூறும் ஸ்டாலினுக்கும்  விரைவில் வரும் என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில், கர்நாடகாவிடம் உரிய தண்ணீரைப் பெற்று தரவும், மேகதாட்டு அணை கட்டுமானப் பணியை சட்டப்படி நிறுத்தவும், ராசி மணலில் அணை கட்ட வலியுறுத்தி, பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் நீதி கேட்டு பேரணி நடத்தி வருகின்றனர். இந்த பேரணி  பூம்புகார் முதல் தொடர்ந்து தஞ்சை, திருவாரூர், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் வழியாக மேட்டூர் அணை வரை சென்று நிறைவு பெறுகிறது. இந்த பேரணியில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு, முழக்கங்களை

கடந்த  (ஜூன் 10ஆம் தேதி)  விவசாயிகளின்பேரணி பூம்புகாரில் தொடங்கி   ஒகேனக்கல் வந்தடைந்தது.  .இன்று காலை ஒகேனக்கலில் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் நீதி கேட்டு பேரணி தொடங்கியது. விவசாயிகள் மத்திய மாநில மற்றும் கர்நாடகஅரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாக பேருந்து நிலையம் வரை சென்று முடிவுற்றது.  இதையடுத்துஅங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்,பேசிய காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன்,  கர்நாடக அரசு தமிழக விவசாயிகளின் எதிர்ப்பை மீறி மேகதாது  பகுதியில் தடுப்பு அணை கட்டி வருகிறது. இந்த அணை கட்டுவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேகதாட்டில் அணை கட்டினால் அந்தப் பகுதியில் உள்ள கனகபுர மாவட்டத்தில் ஏராளமான கிராமங்கள் பாதிக்கப்படும் என்றவர்,  கர்நாடக மாநிலத்தில்,  நிரந்தர நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமாரின் தம்பி ரவியை அங்குள்ள மக்கள் தோற்கடித்துள்ளனர். அதேபோல தான், தமிழ்நாட்டிலும் விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்படாமல், விவசாயிகள் மீது  தமிழ்நாடு அரசு வழக்குகளை தொடர்ந்து வருகிறது.  திராவிட மாடல் ஆட்சி செய்யும், டெல்டாவுக்கு சொந்தக்காரர் எனக் கூறும் ஸ்டாலினுக்கும் இந்த நிலைமை விரைவில் வரும் என்று தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், “டெல்டா, சென்னை உள்ளிட்ட 32 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பது காவிரி நீர் தான். ஆனால், இன்று அது மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. காவிரியில் உபரி நீரைத் தடுத்து ராசி மணலில் அணைக்கட்ட அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.  இந்த அணை கட்டுவதற்கு பெருந்தலைவர் காமராசர் திட்டங்களைத் தயார் செய்து அடிக்கல் நாட்டியுள்ளார்.  ஆனால்,  தமிழ்நாடு அரசு அதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இங்கு அணைக் கட்டினால், உபரிநீரை அங்கு தேக்கி வைத்து, மேட்டூர் அணையின் மூலம் பாசனத்திற்கு திறக்க முடியும்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியிலிருந்தபோது ராசி மணலில் அணை கட்டுவதற்கு, பிரதமராக இருந்த தேவகவுடாவை நேரில் சந்தித்து வலியுறுத்தியது வரலாற்றில் இருக்கிறது. இதனால் ராசி மணலில் அணை கட்டுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெங்களூருவில் கர்நாடக அரசு ஆறுபில்லி கிராமத்தின் அருகே மேகதாட்டிற்கு மேல் ஹார்பள்ளி பகுதியில்  சிறியதாக தடுப்பணை கட்டியுள்ளது. இதனால் பெங்களூரு நகர் பகுதியில் பெய்கின்ற மழையின் போது வருகின்ற தண்ணீரை அங்கே தேக்க வைத்து பயன்படுத்தும் நிலையை உருவாக்கி உள்ளனர். மேலும், மழை இல்லாத காலங்களில் அந்த பகுதியில் கழிவு நீரைச் சேமித்து, அதனை காவிரியில் திறப்பதற்கான செயல் திட்டமும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

இதை தமிழக அரசு ஆய்வு செய்து, சட்டத்திற்கு புறம்பாக இந்த அணை கட்டப்பட்டு இருக்குமேயானால், அதனை இடித்து தள்ளுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேட்டூர் அணை தூர்வார அதிமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த திட்டங்கள் முழுவதுமாக செயல்பாட்டுக்கு வராமல் இருந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையில் 30 அடிக்கு மேல் மணல் தேங்கிக் கிடக்கிறது. நம்மால் அந்த 30 அடிக்கு மேல் தான் தண்ணீர் தேக்கி வைக்கும் நிலை இருந்து வருகிறது. இதனை தூர்வாருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்” எனத் தெரிவித்தார்.