பெங்களூரு

ர்நாடகாவில் நேற்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழகத்துக்கு 8000 கன அடி நீர் திறக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு 12 முதல் 31-ந்தேதி வரை 20 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 11 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறந்துவிடும்படி காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு, காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது. கர்நாடக அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

தற்போது கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததால், இந்த மாத இறுதி வரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று அறிவித்தது.

ஆயினும் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடும்படி காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருப்பது குறித்து ஆலோசிப்பதற்காக பெங்களூருவில் நேற்று முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

காவிரிக்கு நீர் தரும் 4 அணைகளின் நிலவரங்கள் குறித்து அதிகாரிகள் இந்த கூட்டத்தில் விளக்கினர். காவிரியில் வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி நீர் திறக்கலாம் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக முதல்வர் சித்தராமைய தற்போது தமிழகத்துக்கு 11 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட முடியாது என்றும், 8 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுமென்றும் தெரிவித்துள்ளார்.