சென்னை

பாஜக அரசு தென் மாநிலங்களின் குரலை நசுக்க திட்டமிடுவதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.

திமுக எம் பி கனிமொழி எக்ஸ் தள த்தில்,

”இந்தியாவின் அடிப்படை கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கும் நோக்கில் ஒவ்வொரு அடியையும் முன்னகர்த்தி வரும் பாஜகவின் நீண்ட கால செயல்திட்டம் தான் நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு.

பல ஆண்டுகளாக மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி, மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் வகையில், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்து தென் மாநிலங்களின் குரலை நசுக்கத் திட்டமிடுகிறது ஆளும் மத்திய பாஜக அரசு.

மத்திய அரசின் இந்த ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து நமது முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களது தலைமையில் ஒன்றிணைவோம்”

எனப் பதிவிட்டுள்ளார்.