மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்க உத்தரவிடப்பட்டுள்ளதை அடுத்து முதலமைச்சருக்கு கனிமொழி நன்றி தெரிவித்துள்ளார்.

கலைஞரின் எழுத்துக்கள் அனைத்தும் நீடித்து நிற்கும் வகையில் அவரது படைப்புகள் அனைத்தும் நாட்டுடைமை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலைஞரின் துணைவியார் ராசாத்தி அம்மாள் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தை ஏற்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ் வளர்ச்சித் துறை தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

https://x.com/KanimozhiDMK/status/1826840748513464604

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துள்ள கனிமொழி எம்.பி. தனது தாயார் ராசாத்தி அம்மாள் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.