சென்னை:

காஞ்சி சங்கரமட மடாதிபதி ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நள்ளிரவு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

காஞ்சிபுரம்  சங்கரமடம்  பெரியவர் ஜெயேந்திரருக்கு நேற்று மாலை மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் அதையடுத்து  நேற்று நள்ளிரவு போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் காஞ்சி சங்கர மட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது  அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.