சென்னை:
சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமி இன்று ஓய்வு பெறுகிறார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனிஸ்வர்நாத் பண்டாரி கடந்த 12ந்தேதி ஓய்வு பெற்றார்.
இதையடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக அறிவிக்கப்பட்ட மூத்த நீதிபதி துரைசாமி, கடந்த 13ந் தேதி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமி இன்றுடன் ஓய்வு பெறுவதை அடுத்து ஐகோர்ட் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel