டெல்லி

ரும் ஜூலை 3 ஆம் தேதி முதல் ஜியோ செல்போன் கட்டணம் உயர்கிறது.

அம்பானியின் ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம், தனது செல்போன் சேவையில் அனைத்து ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணத்தையும் உயர்த்துகிறது. அதாவது 12 சதவீதம் முதல் 27 சதவீதம்வரை கட்டணம் உயர்கிறது.

இந்த கட்டண உயர்வு ஜூலை 3-ந் தேதி முதல் அமலுக்கு வருவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதை தவிர ,5 ஜி சேவையில்அளவற்ற இலவச 5ஜி சேவைகளை பெறுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஜியோ கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பிறகு, முதல்முறையாக செல்போன் சேவை கட்டணங்களை உயர்த்துகிறது. நேற்று முன்தினம் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் முடிவடைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.