ராஞ்சி

ரும் 30 ஆம் தேதி அன்ரு ஜார்க்கண்ட் மாநில முன்னள் முதல்வர் சம்பாய் சோரன் பாஜகவில் இணைய உள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. வரும் 30 ஆம் தேதி அன்று ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும் ஜே.எம்.எம். கட்சியின் மூத்த தலைவருமான சம்பாய் சோரன், ராஞ்சியில் அவரது ஆதரவாளர்களுடன் பா.ஜ.க.வில் இணைய உள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் சிறை சென்றபோது  அம்மாநிலத்தில் முதல்வராக பதவி வகித்தசம்பாய் சோரன் சுமார் 5 மாதங்கள் முதல்வராக இருந்தார். கடந்த ஜூன் இறுதியில் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் கிடைத்ததால் சம்பாய் சோரன் தனது முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டியிருந்தது.

அப்போது நடந்த சில விஷயங்கள் தன்னை காயப்படுத்தியதாகச் சம்பாய் சோரன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். சமீபத்தில் டெல்லி சென்று அவர் பா.ஜ.க. தலைவர்களையும் சமீபத்தில் சந்தித்திருந்தார். உடனடியாக அவர் பா.ஜ.க.வில் இணையலாம் என்று தகவல் வெளியானநிலையில் சம்பாய் சோரன் நேற்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்தார்.

சந்திப்பின் போது உடனிருன்ந்த அசாம் மாநில முதல்வர்ஹிமந்தா பிஸ்வா சர்மா,

“ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் , பழங்குடியின தலைவருமான சாம்பாய் சோரன் சற்று நேரத்திற்கு முன்பு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்தார். அவர் வரும் ஆகஸ்ட் 30 ம் தேதி ராஞ்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க.வில் அதிகாரப்பூர்வமாக இணைவார்”

என்று தெரிவித்துள்ளார்.