சென்னை

பிரபல இந்தி நடிகை ஜான்வி கபூர் தமிழ்ப் படத்தில் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இயக்குனர் கொரட்டலா சிவா நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் 30-வது படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ‘தேவரா பாகம்-1’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் சாயிப் அலிகான், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு தாய்லாந்து, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் மிக தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் படத்தின் இறுதி கட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

வரும் 27-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளநிலையில், சென்னையில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஜூனியர் என்.டி.ஆர், ஜான்விகபூர், அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் நடிகை ஜான்வி கபூர் தமிழில் பேசியது குறிப்பிடத்தக்கதாகும்

ஜான்வி கபூர்,

‘இன்று நானும் என் குடும்பமும் இந்த நிலைமையில் இருப்பதற்கு நீங்கள் என் அம்மா ஸ்ரீதேவி மீது காட்டிய அன்புதான் காரணம். அதற்கு எப்பொழுதுமே நான் உங்களுக்கு கடமை பட்டிருக்கிறேன். என் அம்மா ஸ்ரீதேவிக்கு கொடுத்த அதே அன்பை எனக்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன், விரைவில் தமிழ் படம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்”

எனத் தமிழில் பேசி உள்ளார்.