டெல்லி

க்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் வக்ஃப் சட்டத்திருத்த மசோடாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

முஸ்லிம்கள் தானமாக வழங்கிய நிலங்கள் மூலம் வரும் வருவாய் மசூதி, முஸ்லிம்கள் கல்வி, மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 1955 ஆம் ஆண்டு இந்த வஃக்பு சொத்துக்களை நிர்வகிப்பதற்காக கடந்த 1955-ம் ஆண்டு வஃக்பு வாரிய சட்டம் உருவாக்கப்பட்டது. இதில் பல முக்கிய திருத்தங்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது.

இன்று இந்த சட்டதிருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்ய்ப்பட்டது இம்மசோதாவில் வக்பு வாரியங்களின் செயல்பாடுகளில் வெளிப்படை தன்மை, வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது, வாரியத்தின் அதிகாரத்தை ஒழுங்குபடுத்துவது உட்பட பல்வேறு முக்கிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இன்று மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இந்த மசோதாவை தாக்கல் செய்துள்ளார்., தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேச கட்சிகள், வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன.

ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங்,

”இந்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என கூறினார். உறுப்பினர்கள் பலரும், வக்பு வாரிய சட்ட திருத்தம் முஸ்லிம்களுக்கு எதிரானது என கூறுகின்றனர். இது எப்படி முஸ்லிம்களுக்கு எதிரானது. ஒரு கோவிலுக்கும், அமைப்புக்கும் உங்களால் வித்தியாசப்படுத்திட முடியாதா? இது மசூதிகளில் தலையிடுவது இல்லை. இந்த சட்டம் அமைப்புக்கானது. அது வெளிப்படை தன்மையுடன் செயல்படுவதற்கானது

என்று கூறி உள்ளார்.

தெலுங்கு தேச கட்சியின் எம்.பி.யான ஜி.எம். ஹரீஷ் பாலயோகி,

”:இந்த திருத்த மசோதா வரவேண்டும். வெளிப்படை தன்மையும் கொண்டு வர உருவாக்க்ப்பட்டதாகும். எனவே இந்த மசோதா நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அதற்கு நாங்கள் நிச்சயம் எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை”

என்று கூறியுள்ளார்.