
சென்னை,
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று கடந்த மாதம் 17ந்தேதி முதல்வர் எடப்பாடி அறிவித்தார்.
அதிமுகவில் பிரிந்த சென்ற ஓபிஎஸ் அணியின் கோரிக்கையை ஏற்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது மறைந்த ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், முன்னாள் ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

Patrikai.com official YouTube Channel